SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியுடன் இணைந்து செயல்படும் கணியம் அறக்கட்டளை

டிசம்பர் 22 2018 அன்று, கணியம் அறக்கட்டளையும் SRM வள்ளியம்மை பொறியியற் கல்லூரியும் இணைந்து பல செயல்பாடுகள் செய்யும் வகையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்க்கணிமை சார்ந்த மென்பொருட்கள் உருவாக்கவும், ஆய்வுகளுக்கும் கணியம் அறக்கட்டளை உதவி புரியும்.

மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு தொடர் பயிற்சிகள் மூலம் அவர்கள் கட்டற்ற மென்பொருட்கள், கட்டற்ற அறிவு மூலங்கள் உருவாக்க உதவி செய்யப்படும்.

கணியம் மின்னிதழில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள் அச்சு இதழாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த திட்டங்களுக்கு ஆதரவு தந்து செயல்படுத்திய கணினி துறைத் தலைவர் திருமதி. வானதி அவர்களுக்கும், துணைப் பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கும் மிக்க நன்றி.

%d bloggers like this: